×

இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை வாலிபருக்கு அரிவாள் வெட்டு

அண்ணாநகர்: முகப்பேர் பாரி சாலையை சேர்ந்த ராஜேஷ்குமார் (22), அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி, அவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், ஜெ.ஜெ.நகர் போலீசார், ராஜேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 20 நாட்களுக்கு முன், சிறையில் இருந்து வெளியே வந்த அவர், நேற்று முன்தினம் இரவு, நண்பர்கள் ஆசிப் (24), கிஷோர் (22) ஆகியோருடன் பைக்கில் அதே பகுதியில் சென்றபோது, இவர்களை பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த 3 பேர், ராஜேஷ்குமாரை மடக்கி, அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இதில் அந்த இளம்பெண்ணுக்கு தொடர்புள்ளதா என விசாரித்து வருகின்றனர்….

The post இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை வாலிபருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Rajeshkumar ,Mukheer Bari Road ,
× RELATED மரக்கன்று நடும் விழா